விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தமிழகத்திற்கு வந்து கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

அவருடன் அ.தி.மு.க நிர்வாகிகள், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலர் இருந்தனர். 

தே.மு.தி.க அலுவலகத்திற்கு முதன்முறையாக வந்த எடப்பாடி பழனிச்சாமி கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். 

அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.கவிற்கு நேற்று 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதனை தொடர்ந்து இன்று திருவள்ளூர், கடலூர், விருதுநகர், மத்திய சென்னை, தஞ்சை போன்ற 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தே.மு.தி.க வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami respect Vijayakanth memorial


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->