இதற்க்கு தி.மு.க தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!
Edappadi Palaniswami indictment TN govt
அ.தி.மு.க பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார்.
அப்போது அவருடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இருந்தனர். ஆளுநரை சந்தித்து மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி,
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போதை பொருள் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் கிடைக்கிறது.
இதேநிலை நீடித்தால் தமிழகம் சீரழிந்து விடும். போதை பொருள் விளக்கம் குறித்து விளக்கமான அறிக்கையை ஆளுநரிடம் அளித்துள்ளோம்.
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். போதைப்பொருள் புழக்கத்திற்கு தி.மு.க தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami indictment TN govt