திருவள்ளூர் அரசு மணல் குவாரியில் மீண்டும் ED ரெய்டு!!
ED Raid again in Tiruvallur Govt Sand Quarry
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து மணல் குவாரி மூடப்பட்டு மணல் விற்பனையும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று துப்பாக்கிய போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளப்பட்ட அளவு மற்றும் தற்போதுள்ள நிலை குறித்து ட்ரோன் கேமரா உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த மணல் குவாரியில் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ட்ரோன் கொண்டு சோதனையில் ஈடுபட்டு வருவது பள்ளிப்பட்டு பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ED Raid again in Tiruvallur Govt Sand Quarry