புதுக்கோட்டையில் பரபரப்பு! மணல் குவாரி அதிபர் வீட்டை சுத்து போட்ட ED அதிகாரிகள் திடீர் சோதனை!
ED officials raid sand quarry owner Ramachandran house
புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவரை வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 4க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உதவியோடு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடந்த போது சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோன்று மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் இன்று புதுக்கோட்டையில் உள்ள அவருடைய கார்ப்பரேட் அலுவலகம், முத்துப்பேட்டையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அமர்க்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மணல் குவாரிகளை அதிகளவில் ராமச்சந்திரன் மட்டுமே குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். தமிழக முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் இந்த சூழலில் ராமச்சந்திரன் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக முழுவதும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி வழக்குடன் இந்த சோதனைக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது ராமச்சந்திர மீதான வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்களா? என்பது சோதனை முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ED officials raid sand quarry owner Ramachandran house