மணல் குவாரிகளுக்கு மட்டுமே குறி!! தமிழகத்தில் மீண்டும் ED ரெய்டு!!
ED officials raid Cuddalore sand quarry
கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் அமலாக்கத் துறை தமிழக முழுவதும் பல அரசு மணல் குவாரிகளில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் ஊழல் தொடர்பான சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சோதனையின் போது அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செப்டம்பரில் தொடங்கிய அமலாக்கத் துறையின் சோதனைகள், மணல் கிடங்குகள், மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலனின் வீடுகள், அலுவலகங்களிலும் நடைபெற்றது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கடலூர் மாவட்டம் எறையூரில் இருந்து அரியலூர் மாவட்டம் வரை செல்லும் வெள்ளை ஆற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
அரசு அனுமதித்த அளவைவிட அதிகமான மணல் அள்ளப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் வெள்ளாற்றை சோதனை செய்து வருகின்றனர்.
English Summary
ED officials raid Cuddalore sand quarry