குளிர்பானத்தில் மதுபானம் கலந்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவன்.!
Drunken husband rape wife with friendqqq
கோவையில் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர் ஓட்டுனராக பணி செய்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆதி நாராயணன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆதி நாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் இருவரும் கொடுத்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது அவருடைய மகனை தூங்க வைத்த பிறகு மாசா குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அதனை மனைவியின் வாயில் ஊற்றி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். ஆனால் மனைவி அதை குடிக்க மறுத்து தட்டி விட்டு படுக்கை அறைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் மது போதையில் மயங்கிய மனைவியை ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கணவர் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Drunken husband rape wife with friendqqq