பள்ளிவாசலில் வைத்து மாணவியை தாக்கிய மது போதை ஆசாமி.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தனது தங்கையை அழைத்து வர மாதேஷ் என்ற நபர் தனது நண்பர்களான வினோத்குமார் மற்றும் தாமஸ் குட்டி ஆகியோருடன் சென்றுள்ளார். இதில் வினோத் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மது அருந்துகின்றனர்.

இந்த நிலையில் மாதேஷ் தனது தனது தங்கையை பள்ளியில் இருந்து வெளியில் அழைத்து வரும்போது தாமஸ் குட்டி அங்கு வந்த பள்ளி மாணவி ஒருவரை திடீரென தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மாதேஷ் மற்றும் வினோத்குமாரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்த இளைஞர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தாமஸ் குட்டி அந்த பள்ளியில் படிக்கும் மாணவியை ஒருதலையாக விரும்பியதாகவும், ஆனால் அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தாக்கியது தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில் பள்ளி மாணவியை தாக்கிய தாமஸ் குட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளிவாசலில் வைத்து மாணவியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drunken boy attack school girl in thirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->