சிவகங்கை : தலைக்கேறிய போதை.! அரசு பேருந்து ஓட்டுனரின் காதை கடித்த ஆசாமி - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சிவகங்கை : தலைக்கேறிய போதை.! அரசு பேருந்து ஓட்டுனரின் காதை கடித்த ஆசாமி - நடந்தது என்ன?

சிவகங்கையிலிருந்து மதுரை நோக்கிச் செல்ல அரசு பேருந்து ஒன்று பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கீழே இறங்கி சென்றுள்ளனர். 

இந்த நிலையில், இந்தப் பேருந்தில் மது போதையில் இருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து வந்து பேருந்தை இயக்குவதற்கு முற்பட்டுள்ளார். இதை பார்த்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். 

இந்த சத்தம் கேட்டு விரைந்து வந்த பேருந்தின் ஓட்டுநர், அந்த போதை ஆசாமியை பேருந்தை இயக்க விடாமல் தடுத்து, அவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போதை ஆசாமி பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அவரது காதையும் கடித்துள்ளார். 

இதில், காயம் அடைந்த பேருந்து ஓட்டுநரை அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்குச சிகிச்சைப் பெற்ற பின்னர் , பேருந்து ஓட்டுநர் தனது காதை கடித்த போதை ஆசாமி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் படி போலீசார் அந்த போதை ஆசாமியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunk man bite government bus driver ear in sivangai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->