#BREAKING:: வேங்கைவயல் விவகாரத்தில் இன்று டி.என்.ஏ பரிசோதனை..!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் நடைபெற்று இன்றோடு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுவரை சிபிசிஐடி போலீசார் 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் நீதிமன்றத்தின் உத்தரவின் படி மனிதக் கழிவின் பகுப்பாய்வின் அடிப்படையில் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 நபர்கள், கீழ முத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு நபர், காவிரி நகரைச் சேர்ந்த ஒரு நபர் என 11 நபர்களுக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள டிஎன்ஏ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. ஏற்கனவே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிடப்படும். 

இந்த டிஎன்ஏ சோதனையில் உட்படுத்தப்பட்ட நபர்களுடன் ஒத்துப் போகாமல் போனால் மேலும் சில நபர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். வேங்கைவயல் கிராம மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தின் விசாரணை தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதால் கூடிய விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DNA test today in vangaivayal case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->