#Breaking || டெல்டாவில் தொடரும் வெற்றி... நன்னிலம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக..!
DMK wins in Nannilam municipality
நன்னிலம் பேரூராட்சியில் உள்ள பெரும்பான்மை வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அரசியல் கட்சிகள், சுயட்சை வேட்பாளர்கள் என பலமுனை போட்டி நிலவி வந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் சுமார் 60 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். நன்னிலம் பேரூராட்சியில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதன் தொடர்ச்சியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ரன.
இந்நிலையில்நன்னிலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 வார்டுகளை அதிமுகவும் ஒரு வார்டை சுயட்ச்சையும் கைப்பற்றியுள்ளனர்.
English Summary
DMK wins in Nannilam municipality