அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி - கையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் லட்சுமணன் என்பவர் தீவிர திமுக பிரமுகராக உள்ள நிலையில் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். 

இவர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் உள்ளிட்டோரிடம் அரசுப் பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ. 8 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால், இதுவரைக்கும் வேலை வாங்கி கொடுக்காமல் இருந்ததனால், பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து வேலை வாங்கி தாருங்கள் அல்லது பணத்தை கொடுத்து விடுங்கள் என்று வற்புறுத்தி வந்துள்ளனர். 

உடனே லட்சுமணன் பணம் கொடுத்த மூன்று பேருக்கும் பல்வேறு அரசு துறைகளில் வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை கொடுத்துள்ளார்.

அதனை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலைக்கு சேர சென்றபோது அது போலியான ஆணை என்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு லட்சுமணனை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk executive arrested for money fraud


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->