வி.ஏ.ஓ. அலுவலகத்தில் தீ விபத்து: எரிந்து நாசமாகிய வேட்டி, சேலைகள்! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், கோட்டையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் முருகவேல் என்பவர் வி.ஏ.ஓ ஆக பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து திடீரென புகை வந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து முருகவேலுக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ  மேலும் பரவாமல் விரைந்து அணைத்தனர். 

இருப்பினும் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் தீயில் எரிந்து சேதம் ஆகின. 

மேலும் அலுவலகத்தில் இருந்த 3 நாற்காலிகள் உள்பட ஏராளமான பொருட்கள் தீயில் கருகின. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அலுவலகத்தில் இருந்த ஒரு ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதன் வழியாக மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து அப்பகுதியில் இருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul VAO office cut fire police inquiry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->