திண்டுக்கல் | சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோ சட்டத்தில் கைதான சகோதரர்கள்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள ராமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்கள் ரங்கநாதன் (வயது 23), கருப்பசாமி (வயது 21) இவர்கள் 2 பேரும் உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பக்கத்து கிராமத்திற்கு சென்றனர். 

அப்போது சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்தனர். அதே பகுதியில் உள்ள பள்ளியில் உறவினரின் 9 மற்றும் 5 வயது மகள்கள் படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி இருவரும் 2 பள்ளி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதனால் சிறுமிகள் உடல் சோர்ந்து காணப்பட்டதால் அவர்களது பெற்றோர் சிறுமிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

அப்போது சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி இருவரும் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Sexual assault girls Brothers arrested POCSO Act


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->