இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.! கர்ப்பமான இளம்பெண்... தப்பி ஓடிய சமையல் மாஸ்டர்.! கோவையில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் முருகேசன் (35). இவருக்கும், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இரண்டு பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்நிலையில் சூலூரில் வாடகைக்கு வீடு எடுத்து இளம் பெண்ணுடன் தங்கிய முருகேசன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமான நிலையில் முருகேசனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த முருகேசன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மாயமானார். இதைத்தொடர்ந்து இளம்பெண் முருகேசன் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இளம்பெண்ணை ஏமாற்றிய முருகேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cooking master who got the young woman pregnant and ran away in kovai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->