விருதுநகர் : பெண் சப்ளையருடன் ஓட்டம் பிடித்த சமையல் மாஸ்டர்...! போலீசார் வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் சப்ளையருடன் சமையல் மாஸ்டர் மாஸ்டர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் மலையடிபட்டி பகுதியை சேர்ந்தவர் சோனைமுத்து(35). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள். இந்நிலையில் சோனைமுத்துவுக்கும், அதே ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கும் அழகம்மாள் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இதையறிந்த பாண்டியம்மாள், கணவர் சோனைமுத்துவை கண்டித்துள்ளார். இருப்பினும், அழகம்மாளுடன் தொடர்ந்து பழகி வந்த சோனைமுத்து, சம்பவத்தன்று பாண்டியம்மாளிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சோனைமுத்து வீட்டிற்கு வரவில்லை. இதனால் பாண்டியம்மாள் பல இடங்களில் கணவரை தேடியுள்ளார். ஆனால் கணவர் எங்கு தேடியும் கிடைக்காததால் பாண்டியம்மாள் இது குறித்து ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சோனைமுத்து, அவருடன் வேலை பார்க்கும் சப்ளையர் அழகம்மாளுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சோனைமுத்து மற்றும் அழகம்மாள் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cooking master run with the female supplier for illegal affair in virudhunagar


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->