தருமபுரி : பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட நடத்துனர் - நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக நகர கிளையில் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் சண்முகம். இவருக்கு தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், பணி வழங்காமலும் விடுமுறை அளிக்காமலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று நடத்துனர் சண்முகம் வழக்கம் போல் பணிக்கு சென்றார். அங்கு அவருக்கு வழக்கமான பேருந்தில் செல்வதற்கு பதிலாக வேறு பேருந்தில்  செல்வதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதனால், மனவேதனை அடைந்த நடத்துனர் சண்முகம் தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். 

இதைப்பார்த்த பணிமனைத் தொழிலாளர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

conductor protest in dharmapuri bus stand


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->