திருப்பூரில் பரபரப்பு || நடுரோட்டில் கல்லூரி மாணவர்களிடயே மோதல்.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பரபரப்பு || நடுரோட்டில் கல்லூரி மாணவர்களிடயே மோதல்.!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் கார்த்திகேயன், லட்சுமணன், பிரபாகரன், சூர்யா, அர்ஜுன் உள்ளிட்டோர் பயின்று வந்தனர். நண்பர்களான இவர்கள் ஐந்து பேரும் தினமும் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் அனைவரும் கடந்த 1 ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது விஜயாபுரம் பகுதியில்  பேருந்தை சிலர் வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பேருந்தில் இருந்த ஐந்து பேரையும் கீழே இறக்கி சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கார்த்திகேயன் படுகாயம் அடைந்துள்ளார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுக்காயமடைந்த மாணவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம்  தொடர்பாக விசாரணை நடத்தியதில், "சூர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ தொடர்பாக கிஷோர் என்ற மாணவர் பதில் பதிவு செய்ததனால் இருவருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

இதில் கிஷோர் அடியாட்களை வைத்து ஐந்து மாணவர்களையும் தாக்கியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student injured for gang attack in tirupur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->