தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி.!
chief minister mk stalin speech about pm modi
சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியுள்ளார். அதாவது, “ மகளிர் தினத்திற்கு மகளிருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெண்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்தவே மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொளத்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் எதுவும் இல்லை. மாநில அரசை வஞ்சிக்காத மத்திய அரசு வேண்டும். காலம் கனிந்து வருகின்றது. தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
English Summary
chief minister mk stalin speech about pm modi