தொடங்கியது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா.. தமிழ்நாடு வரலாறிற்கு குரல் கொடுத்த கமல்..!
Chess Olympiad Started
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றிலிருந்து ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட து. இந்த போட்டியின் துவக்க விழா தற்போது நடந்து வரும் நிலையில், வீரர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர், பொதுமக்கள், திரைத்துறையினர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
துவக்க விழாவில் தமிழ்நாடின் வரலாறு குறித்து வீடியோ ஒன்றை ஒளிபரப்பினர். அதில், நடிகர் திரு கமலஹாசன் பிண்ணனி குரல் கொடுத்திருந்தார். பார்வையாளர்களை அந்த வீடியோ கவர்ந்தது.