சில்மிஷம் செய்த ஓட்டுநர்: நடுரோட்டில் பெண் செய்த சிறப்பான சம்பவம்! - Seithipunal
Seithipunal


சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் இவர் ஓட்டுநர் இருக்கை அருகே அமர்ந்திருந்த போது ஆட்டோ ஓட்டுனர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

அந்த பெண் பல முறை கண்டித்தும் ஆட்டோ ஓட்டுனர் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த பெண் பேருந்து நிலையம் அருகே இறங்கி அந்த ஓட்டுனரை ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து இழுத்து தனது செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதனை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஏராளமானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. 

மேலும் அங்கிருந்த ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai woman dragged auto driver with sandal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->