இரண்டு நாளைக்கி மழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள்ள மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜூலை 27 ஆம் தேதியான நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் ஏழு செண்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் கீழணை, சேலம் மாவட்டம் மேட்டூர், கடலூர் மாவட்டங்களில் 6 சென்டி மீட்டர் மழையும் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஜூலை 26 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai weather report announce rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->