இன்ஸ்டா பழக்கத்தால், இரக்கம் காட்டிய பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம்.! பெண்களே உஷார்.!
chennai instagram connection the boy cheating
இன்ஸ்டாகிரம் மூலமாக இளம் பெண்ணுடன் பழகிய ஒரு காதலன் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பகுதியில் வசித்து வரும் ருக்சனா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் மிகவும், ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவருக்கு பழவந்தாங்கலை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட இளைஞர் மகேஷ் தன்னுடைய குடும்பம் ஏழ்மையான நிலையில் இருப்பதாக கூறி அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் வாங்கி கொண்டு இருந்துள்ளார்.
வாங்கிய பணத்தை திருப்பி தராமல் மகேஷ் அலை கழித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தான் ஏமாந்ததை புரிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஆண் நண்பர் மகேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
chennai instagram connection the boy cheating