அடுத்த 3 நாட்களுக்கு சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு! முழு விவரம் இதோ!
Chennai in red zone next 3 days
அடுத்த 3 நாட்களுக்கு சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு! முழு விவரம் இதோ!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை முதல் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றால் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.
அதன் காரணமாக நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai in red zone next 3 days