பயணிகள் கவனத்திற்கு... நாளை புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து!
Chennai electric train services canceled
சென்னையில் நாளை 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
சென்னை-செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
இதனால் இந்த வழித்தடத்தில் நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரயில்கள் இயங்காது. கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் சென்னை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவையை இன்று முதல் 6நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
இன்று முதல் 22 ஆம் தேதி வரை இரவு 10:45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை-செங்கல்பட்டு இடையே ஆன புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai electric train services canceled