கருணாநிதி பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார். அவரின் நினைவாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் தமிழக அரசு சார்பில் நினைவிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில்நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னமும் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்பட பல்வேறு துறைகளில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

இதற்கு மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தமிழக அரசு பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பப்பட்டது

இந்த கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் மத்திய அரசு பேனா நினைவு அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனவும், கொசத்தலை ஆற்றின் முக துவாரத்தில் வேணா நினைவுச் சின்னம் அமைவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against karunanidhi pen memorial in supreme court


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->