சென்னை || நடிகையின் செல்போன் எண் கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல்..!
cameraman was threatened
நடிகையின் செல்போன் எண் கேட்டு கேமரா மேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர்.
சென்னை, ராமாபுரம், பாரதி சாலையை சேர்ந்தவர் லட்சுமி பிரபாகரன்.இவர் சினிமாவில் கேமரா மேனாக பணியாற்றி வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், அவர் சினிமாவில் கேமரா மேனாக பணிபுரிவதாகவும் அப்போது , சூர்யா என்பவர் 2006-ம் ஆண்டு என்னை சந்தித்து பாரதியார் பாடல் ஒன்றை நடிகை பத்மபிரியாவை வைத்து ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டார்.
அதனை அடுத்து அந்த பாடலை ஒளிப்பதிவு செய்து முடித்தோம். அதன்பிறகு நானும் சூர்யாவும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை தரும்படி கேட்டு கடந்த சில மாதங்களாக என்னிடம் தகராறு செய்து வருகிறார். அவரின் செல்போன் எண்ணை தரவில்லை எனில் என்னுடைய மனைவியை கர்ப்பழித்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதனல், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.