பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் - எங்குத் தெரியுமா?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி வாங்கியவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாங்க அதிக அளவில் குவிந்தனர்.

தமிழகத்தில் தக்காளி உற்பத்தி குறைவு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில், நேற்று ஒருகிலோ தக்காளி 130 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குறைந்த விலையில் தக்காளி வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளிலும், உழவர் சந்தைகளிலும் தக்காளியை சற்று குறைந்த விலைக்கு விற்று வருகிறது. 

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள 'தொப்பி வாப்பா' என்ற உணவகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் பக்கெட் பிரியாணி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது.  இதையறிந்த மக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் காத்திருந்து பிரியாணியுடன் தக்காளியையும் வாங்கிச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

buy bucket briyani get free one kg tomatto in tiruvaru hotel


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->