ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமி பலாத்காரம்.. இளைஞர் மீது போக்சோ.! - Seithipunal
Seithipunal


ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்ததாக 21 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் டேவிட் (வயது 21). இவர் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதன்பின்னர் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கோவை வந்துள்ளார்.

அதன் பின்னர் இருவரும் மருதமலை சென்று திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை டேவிட் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்து விட்டதாக கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் இளைஞர் டேவிட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy kidnapped and raped 17 years old girl in covai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->