திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.!
bomb threat to trichy airport
தமிழகத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான திருச்சியில், 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதனை, பிரதமர் மோடி வரும் ஜன., 2ல் திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணிக்கு, நேற்று பெயர் குறிப்பிடாமல், மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், 'திருச்சி விமான நிலையத்தில், விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது.
அது, எப்போது வெடிக்கும் என்று தெரியாது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையம் முழுதும், மோப்ப நாய், 'மெட்டல் டிடெக்டர்' உதவியால் சோதனை மேற்கொண்டனர்.
இருப்பினும், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. அதன் பின்பு தான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இது குறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.
English Summary
bomb threat to trichy airport