முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்து - கடலூர் பாஜக நிர்வாகி கைது.!  - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்து - கடலூர் பாஜக நிர்வாகி கைது.! 

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட கடலூர் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங்க் தலைவராக உள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். 

இதைப்பார்த்த திமுகவினர் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர். மேலும், முதலமைச்சர் குறித்து தவறாக சித்தரித்து முகநூலில் கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி ஜெய்குமார் மீது திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் திருநெல்வேலி போலீசில் புகார் அளித்தனர். 

இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருநெல்வேலி போலீசார் கடலூர் சென்று பாஜக நிர்வாகி ஜெய்குமாரை இன்று கைது செய்துள்ளனர். பின்னர் அவரை விசாரணைக்காக திருநெல்வேலி அழைத்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive arrested for post defamatory against cm stalin in face book


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->