மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான வழக்கு.. ஆவடி நாசருக்கு கொட்டு.. டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ரூ.28 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார்.  

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் அவர்கள் தலைமையிலான அமர்வு இன்று மாலை 4.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் ஆவடி தேர்தல் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாஃபா பாண்டியராஜனின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avadi Nasser case against Mafoi Pandiyarajan was dismissed by ChennaiHC


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->