நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் - வழிவிட கோரிய ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் - வழிவிட கோரிய ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்.!!

சென்னையில் உள்ள அம்பத்தூரில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ். ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு பணிமுடிந்து ஒரகடம் ஐயப்பன் தெரு சந்திப்பு வழியாக வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கௌதம், தன் நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் கெளதம் மற்றும் அவரது நபர்களிடம் வழிவிடுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் வேறு வழியாக சுற்றி செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது கைக்கலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கௌதம் மற்றும் அவனது கூட்டாளிகள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காமேஷை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.

இதனால் வலித் தாங்க முடியாமல் காமேஷ் அலறி துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த காமேஷின் சகோதரர் சதீஷையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்தது தப்பித்துச் சென்றது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி் மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சதீஷை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் காமேஷ் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் கௌதம் உட்பட 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto driver kill in chennai ambathur


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->