ஒருதலை காதல் விவகாரம்: 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல்.! போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை தாக்கி மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கம் (25). இவர் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவி காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், மாணவியை பின்தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்த முத்துராமலிங்கம், திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கியுள்ளார். மேலும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மதுரை அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை தாக்கி, மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto driver arrested for threatening 10th class girl in madurai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->