#சேலம் : 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவருக்கும், மங்களபுரம் அருகே உள்ள வேப்பிலைகுட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சிறுமி அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய ஆனந்தை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Auto driver arrested for pregnant a 14 year old girl in salem


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->