இரண்டு மகள்களின் முன்னாலேயே, தாயின் சேலையை உருவி வெறிச்செயலில் ஈடுபட்ட கொடூரன்.!  - Seithipunal
Seithipunal


முதலியார்பேட்டையில் அவ்வை நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த பிரபாவதி என்பவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய கணவர் சிவசக்தி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தன்னுடைய மகள் மற்றும் மனைவியை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரபாவதி கூலி வேலை செய்து அவரது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், பிரபாவதி தன்னுடைய மகள்களுடன் இரவு நேரத்தில் வீட்டில் இருந்த பொழுது லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் சேர்ந்த உதயகுமார் என்பவர் தன்னுடைய இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபாவதி வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது பிரபாவதியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி உன்னுடைய மகளில் ஒரு மகளை என்னுடன் அனுப்ப மாட்டாயா? என சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின்னர் இரண்டு மகள்கள் முன்னிலையிலேயே, அவரின் சேலையை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார்.

பின்னர் பிரபாவின் வயிற்றில் காலால் எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து உதயகுமார் தன்னுடைய கூட்டாளிகளுடன் கிளம்பியுள்ளார். இதன் காரணமாக படுகாயமடைந்த பிரபாவதி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATTACKING WOMEN IN MUDHALIYARPETTAI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->