வாடகை கேட்டதில் ஏற்பட்ட வாக்குவாதம்! இரும்பு வியாபாரி மீது பாய்ந்த கொலை வழக்கு! நடந்தது என்ன?
Argument over asking rent murder case against Merchant
சேலம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (வயது 60) இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு சொந்தமான வீட்டில் பாலசுப்பிரமணியம் (வயது 42) என்பவர் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு உள்ளார்.
இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பாலசுப்பிரமணியம் வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் தனசேகர் வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நேற்று முன்தினம் பாலு வீட்டை காலி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டு உரிமையாளருக்கும் பாலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த பாலு மரக்கட்டையால் தனசேகரை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த தனசேகர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக தனசேகரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தனசேகரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாலுவை தேடி வருகின்றனர்.
வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Argument over asking rent murder case against Merchant