மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளிலும் வெற்றி... - எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர், பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, பொது மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டுவிட்டு தி.மு.கவினர், அ.தி.மு.க அரசியலில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றியை பெறும். ஜெயலலிதா செய்த நல்ல திட்டங்களும் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை பொதுமக்கள் உணர்ந்து அ.தி.மு.கவிற்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK alliance win 40 constituencies


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->