சீமானை எதிர்க்க என்னால் முடியவில்லை - வழக்கை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி.! - Seithipunal
Seithipunal


சீமானை எதிர்க்க என்னால் முடியவில்லை - வழக்கை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். 

குமட்டுமல்லாமல், சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் திடீரென வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது. சக்திவாய்ந்தவராக இருக்கிறார். புகார் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவி்ல்லை.

சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்தும் கிடைக்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுகிறேன். மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijayalakshmi petition withdrew agaist seeman


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->