ரஜினி மீதான வழக்கில் உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி 'துக்ளக்' விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.

அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய 'துக்ளக்' பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.

இந்த நிலையில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசிதாகவும் அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி திராவிடர் விடுதலை கழகம் ரஜினிக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம். பெரியார் குறித்து அவதூறாக அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆறுமுகம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajini case in chennaim court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->