17 வயது மாணவன் பலி..!! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!! - Seithipunal
Seithipunal


இருசக்கரவாகன விபத்தில் 17 வயது மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அரசூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கு திருமணமாகி ஆபிரகாம் (17) என்ற மகன் உள்ளார். இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், ஆபிரகாம் தனது தந்தையின் இரு சக்கரவாகனத்தில் அந்த பகுதியில் உள்ள அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதியது.   இந்த விபத்தில் ஆபிரகாம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவி செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident Near Thiruvalluvar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->