சாலையோரம் இருந்து மரத்தின் மீது இரு சக்கர வாகன மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


சாலையோரம் இருந்த மரத்தின் மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தேனி மாவட்டம் ஜி.உசிலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(60). இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கண்டமனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திடீரென நிலை தடுமாறியே இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து கண்டமனூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A twowheeler collided with a tree in theni


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->