தேனி: குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
A person suicide due to family problem in theni
தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் தேவாரம் மூணான்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பிரிதரன்(35). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரிதரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரிதரனின் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனவேதனையடைந்த பிரிதரன் வாழ்க்கையில் வெறுப்படைந்து, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேவாரம் போலீசார், பிரிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person suicide due to family problem in theni