உங்களை பிரிந்து செல்கிறேன் என்று நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிய தனியார் நிறுவன ஊழியர்.! தூக்கு போட்டு தற்கொலை.!
A person commits suicide in Vellore
வேலூர் மாவட்டத்தில் உங்களை பிரிந்து செல்கிறேன் என்று நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிய தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அசோக் நகர் பகுதியை சேர்ந்த சத்யானந்தன் என்பவரின் மகன் இளையராஜா(38). இவர் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளையராஜாவின் மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இதையடுத்து இளையராஜா நேற்று மாலை நண்பர்களுக்கு செல் போனில் உங்களை பிரிந்து செல்கிறேன் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜாவின் நண்பர்கள், வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீட்டின் அறையில் இளையராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person commits suicide in Vellore