#தஞ்சாவூர் || நண்பரின் 6 வயது மகளை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு "ஆயுள் தண்டனை".! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் நண்பரின் 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வேலுச்சாமி (49). இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சென்றுள்ளார். அப்பொழுது நண்பரின் 6 வயது மகளை குளியல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கதறி அழுது கொண்டே இருகுறித்து தாயிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். இதையடுத்து இதுதொடர்பான வழக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நண்பரின் ஆறு வயது மகளை பலாத்காரம் செய்த வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A laborer who raped a friend 6 year old daughter gets a life sentence in Thanjavur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->