கிருஷ்ணகிரியில் கொடூரம்.! சிறுமியை கர்ப்பமாக்கிய 2 அண்ணன்கள் உள்பட 4 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய இரண்டு அண்ணன்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தந்தையுடன் வசித்து வருகிறார். மேலும் இவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் திடீரென சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

இதில் சிறுமியுன் பிறந்த அண்ணன் மற்றும் பெரியப்பா மகன், உறவினர் சந்திரசேகரன் (42), தமிழ்வண்ணன் (29) ஆகிய நான்கு பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், தற்பொழுது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்கள் உட்பட நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மதுவுக்கு அடிமையான சிறுமியின் தந்தையையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people arrested including 2 brothers who made the girl pregnant in kirishnagiri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->