திருவண்ணாமலை தீபத்திற்காக 3500 கிலோ ஆவின் நெய் கொள்முதல்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்ட அருணாச்சலேஸ்வரர் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் நெய் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 3500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

அதே போன்று கோவில் நிர்வாகத்திடம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நேரடியாக நெய் காணிக்கை செலுத்த தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும் மகா தீபத்திலிருந்து சேகரிக்கப்படும் தீப மை ஆருத்ரா தரிசனத்தன்று நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அதேபோல் பக்தர்களுக்கு ஒரு பாக்கெட் ரூ.10 என விநியோக செய்யப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3500kg of aavin ghee purchased for Tiruvannamalai Deepam


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->