300 கிலோ செம்மரக்கட்டைகள் வீட்டில் பதுக்கிய 2 பேர் கைது.!
300 kg of sheep logs seized redhills Chennai
வீட்டில் பதுக்கிய 300 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை செங்குன்றம் அடுத்த காந்திநகர் சுபாஷ் சந்திரபோஸ் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சோழவரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வீட்டில் 300 கிலோ எடை கொண்ட செம்மர கோட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவற்றின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக அசோகன்(50) மற்றும் அருண்குமார்(28) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் இரண்டு பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
300 kg of sheep logs seized redhills Chennai