'பால்வாடி சரியில்ல கலெக்டர்.' கலெக்டரிடம் மனு அளித்த மூன்று வயது சிறுமி.! - Seithipunal
Seithipunal


திருநேல்வேலி மாவட்டத்தில் கலெக்ட்டர் கார்த்திகேயன் தலைமையில்  நெல்லை மாவட்ட மக்கள் குறைத்தீர்ப்பு நாள் கூட்டம் நடைப்பெற்றது. அதில் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு மக்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பித்தனர் . அப்போது நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சார்ந்த  மூன்று வயது சிறுமி ஒருவர்  தான் பயிலும் அங்கன்வாடி பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி  மனு   அளித்தது  அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறை தீர்ப்பு நாளில் மக்கள் பகுதி சார்ந்த குறைகளை எழுதி கலெக்டரிடம் சமர்ப்பித்தார்கள்.
அப்பொழுது 3 வயது குழந்தையான ஸபா ஹாதியா என்ற சிறுமி கலெக்டரிடம் மனுவை அளித்ததை தொடர்ந்து அந்த மனுவில் அந்த குழந்தை முறையிட்டிருப்பது மேலப்பாளையம் அம்பிகபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் நான் 10  மாதங்களாக பயின்று வருகிறேன். இங்கு முதலமைச்சரின் ஆணைப்படி  சத்துணவு  முட்டை மற்றும் சத்துமாவு போன்ற பொருட்களை  நல்ல முறையில் சிறப்பாக கொடுத்து வருகிறார்கள். இங்கு நான் உட்பட 20 குழந்தைகள் படித்து வருகிறோம்  இந்திய விளையாட்டு உபகரணங்களோ விளையாட்டுப் பொருட்களோ இல்லை. மேலும் எங்களுக்கு கழிப்பிட வசதியும் இல்லை . அதனால் புதியதாக கழிப்பிட வசதியோடு கட்டிடம் கட்டி ட விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள்  வழங்குமாறு  மாவட்ட ஆட்சியர் மூலமாக முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என  அந்தக் கடிதத்தில் சிறுமி குறிப்பிட்டு இருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் சார்பாக  மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்கள்  மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டர் தலைமையில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்றதொரு கூட்டம் நெல்லை மாவட்டத்தின்  மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் தான் மூன்று வயது சிறுமியான ஸபா ஹாதியா  கலெக்டரிடம் தனது கோரிக்கைகளை மனுவாக அளித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 year old girl submit petition to distrct collector


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->