நெல்லை: கல்குவாரி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்.!
3 killed in Nellai quarry accident
நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கல்குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கல்குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மிக்க பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் மீட்கப்பட்ட தொழிலாளி விஜய் பாறை சரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
3 killed in Nellai quarry accident