புயல் எதிரொலி: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
3 districts red alert
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று அதிகாலையில் வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மிக்ஜம் புயல் உருவானது.
சென்னைக்கு தென்கிழக்கு பகுதியில் 290 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் தீவிரமாக வலுபெறுள்ளது.
இதன் காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் 3 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.